காதல் தேசம் !

காதல் தேசம் !
வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Blog Widget by LinkWithin

Sunday, November 29, 2009

பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjma_DoX_u396Ommxo8aBCNdAhPW4Usyy-FypAxy10nLOJ-W6F_iVdAdx7VmRIM-86VNkAtctjV5zvfs5LsA5umsWYszZjrpNwudVL97dTYmDU9XlID5Ceak3eB5cH7f2h3dpATZYdqOwAz/s1600/HappyBirthdayFlowers.jpg


பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)


9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க
http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGxBc-ugTmVoUF9xhmg2ZFv8OiiEY9Q4nGZTJLYLi1QdRTdES34btzC-jrL-LU32AniGLhdPRuwx_-QN12Jume8sbtelUTMq8BQzxJoAIDYpAMVxRJzgXyCUcJ8JAUfqeSrk02PCdD1t4/s1600/lovefaili.jpg

Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...






smail

http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg

Update me when site is updated





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWim19h2XGs6RepdLjJGzyZYp993fO5Bf1JPsKsEU9x6yI9C6DNuSHfM1ns9Pa-mrON2w0h73qy_izBrfc_oGOwkRrX_D_91Sx38U9QGB5kXoVUFqIg0IUawWNrmtxb1o_E9K-k71lxRNq/s1600/Nandri.jpg
Share/Save/Bookmark

Thursday, October 8, 2009

'கடலை' எனப்படுவது யாதெனில்..

'கடலை' எனப்படுவது யாதெனில்..


"காத‌ல் கொண்டேன்" த‌னுஷ் மாதிரி சைக்கோவா திரிவான். இதெல்லாம் காலேஜ் வாழ்க்கையின் இன்றிய‌மையாத‌ அங்க‌ம்.

கடலை. கல்லூரியில் செமஸ்டர், அசைன்மென்ட், லேப், ப்ராக்டிகல், அரீயர்ஸ் போன்ற சொல்களை விட மிக அதிகமாக புழங்கும் சொல். இந்த சொல்லை சொல்லாமல் இருந்தால் அவன் கல்லூரி மாணவனே இல்லை என்ற அவப்பெயருக்கு ஆளாக நேரிடலாம். இதில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. குறிப்பாக, லேடீஸ் ஹாஸ்டலில் தான் இந்த சொல் அதிகமாக பயன்படுத்தப்படும். பாய்ஸ் ஹாஸ்டலிலும் சரி, லேடீஸ் ஹாஸ்டலிலும் சரி, இந்த கடலை போடுவார்கள் தனித் தீவாக இருப்பார்கள். யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். அது அப்படியே கம்பெனி, மேரேஜ் லைஃப் என்று போனாலும், கடலை என்ற சொல்லை கேள்விப்பட்டால், அது ஏன் கேள்விப்பட்டால், பஸ் ஸ்டாண்டில் எவனாவது வேர்க்கடலை விற்றால் கூட, திடீரென கல்லூரி லைஃப் ஒரு செகண்ட் க்ராஸ் ஆகும். பின்னர் ஒரு செகண்டில் திரும்ப அதே வேலை, பொண்டாட்டி/புருஷன் டென்ஷன், ஸோ அன்ட் ஸோ....
காலேஜில் ஃபர்ஸ்ட் இயரில் கடலை போடுபவனை கன்னா பின்னாவென கிண்டல் செய்யும் ஒருவன், காலேஜ் முடிவதற்குள் எவளுடனாவது கடலை போட்டுக் கொண்டு பேரைக் கெடுத்து, சேது விக்ரம் மாதிரி மாறி விடுவான். Vice versa also applicable :) இது காலேஜின் விதி. இதைக் கடந்து யாராலும் வந்து இருக்க முடியாது. மாறி வ‌ந்து இருந்தால், அவ‌ன்/ள் அப்நார்ம‌ல். மாத்ரூபூதம், நாராய‌ண‌ ரெட்டி மாதிரி டாக்ட‌ர்க‌ளிட‌ம் செக் ப‌ண்ணினால் ஷேம‌ம்.

இந்த‌ க‌ட‌லை நோய்க்கு ஆண்/பெண் வித்தியாச‌ம் எல்லாம் கெடையாது. க‌ட‌லை போடுவ‌தில் ஒரு மிக‌ப்பெரிய‌ அட்வான்டெஜ் என்ன‌வென்றால், ல‌வ் ப‌ண்ணியே தீர‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌ம் எல்லாம் இல்லை. ரெண்டு பேருக்குமே பிடித்திருக்கிற‌து என்றால் ம‌ட்டுமே அது ல‌வ்வில் முடியும். அது 5% ஒன்லி. ம‌த்த‌ப‌டி பிடிக்க‌வில்லையென்றால், ஈஸியாக‌ க‌ழ‌ற்றிவிட்டு வேற‌ ஒரு ஆளைத் தேடிப் போக‌லாம். இது தான் எல்லாரையும் ஈர்க்கும் அதிச‌ய‌ம். ம‌ற்ற‌ப‌டி, ஏதாவ‌து ஒரு ஆளுக்கு ம‌ட்டும் ல‌வ் வ‌ந்து, அடுத்த ஆளுக்கு வ‌ர‌வில்லையென்றால், ரொம்ப‌ சிம்பிள். க்ளைமேக்சில் ஹீரோயின்ஸ் சொல்வ‌து மாதிரி, "உன்னை ந‌ல்ல‌ ஒரு ஃப்ரெண்டா ம‌ட்டும் தான் நென‌ச்சி இருந்தேன். ம‌ற்ற‌ப‌டி ந‌ம‌க்குள்ள வேற‌ ஒண்ணும் வேணாமே ப்ளீஸ்" என்று டைய‌லாக் பேசி நைசாகக் க‌ழ‌ன்று விட‌லாம். இது முடிந்த‌வுட‌ன் வேற‌ ஒரு க‌ட‌லை பார்ட்ன‌ர் கிடைக்கும் வ‌ரை, ந‌ன்றாக‌ ஃபீல் ப‌ண்ண‌லாம். அது ஒரு நைஸ் ஃபீலிங்.

பாகுபாடு இன்றி பார்க்கும் எல்லாரிடமும், கடலை போடுபவனு/ளுக்கு ஒரு பார்ட்னர் கூட அமையாது. இது காலேஜின் மோசமான தலையெழுத்து. வருடத்திற்கு ஒரு ஃபிகர் என்று வாழ்பவனது வாழ்வில் ஒரு நல்ல நச் ஃபிகர் அமையும். அதுவும் காலேஜ் லைஃப் முடிந்தவுடன் கழன்றுவிடும். மற்றவனுக்கெல்லாம், லேப் அசைன்மென்ட் எழுத ரிக்கார்ட் நோட் கொடுக்கும் அளவுக்கு மட்டுமே ஒரு அட்டு ஃபிகர் அமையும்.

க்ரூப்பாக‌ அதாவ‌து ஃபைவ் ஸ்டார் மாதிரி மூணு ப‌ச‌ங்க‌, ரெண்டு பொண்ணு என்று சுற்றுப‌வ‌ர்க‌ளில், யாருக்கும் தெரியாமல் மினிம‌ம் கியார‌ண்டியாக‌ ரெண்டு ஜோடி உஷார் ஆகிவிடும். கடைசி ஒருவ‌னுக்கு லாலிபாப் தின்ற‌து போக‌ குச்சி ம‌ட்டுமே. இப்ப‌டி திரிப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் ந‌ம்ப‌வே கூடாது.

இந்த‌ க‌ட‌லையை ரொம்ப‌ யூஸ்ஃபுல்லா யூஸ் ப‌ண்ற‌ ஒரு க்ரூப் இருக்கு. அதாவ‌து க‌ட‌லை போடுற‌ பொண்ணுகிட்ட‌யே, அந்த‌ காலேஜ்ல சூப்பர், ந‌ச் ஃபிக‌ர்கிட்ட‌ ல‌வ் லெட்ட‌ர், கிஃப்ட் ஐட்ட‌ம்ஸ் பாஸ் ப‌ண்ணுவாய்ங்க‌. அதே மாதிரி தான் பொண்ணுங்க‌ளும். க‌டைசில‌ அவ‌ன், "காத‌ல் கொண்டேன்" த‌னுஷ் மாதிரி சைக்கோவா திரிவான். இதெல்லாம் காலேஜ் வாழ்க்கையின் இன்றிய‌மையாத‌ அங்க‌ம்.

இதுல‌ ஒரு மோச‌மான‌ க்ரூப் ஒண்ணு இருக்கு. அதாவ‌து ஒரு டைம்ல‌ ஏர்டெல்ல‌ ல‌வ்வ‌ர் பேக்னு ஒண்ணு இருந்துச்சி. எப்ப‌டின்னா, ஒரு ந‌ம்ப‌ர்ல‌ இருந்து இன்னொரு ஏர்டெல் ந‌ம்ப‌ருக்கு ம‌ட்டும் எப்ப‌ பேசுனாலும் ஃப்ரீ. இதை ல‌வ் ப‌ண்றேன்னு சுத்திக்கிட்டு இருக்க‌ ஜோடி போட்டுக்கிட்டு ப‌ண்ற‌ அள‌ப்ப‌றை தாங்காது. அந்த‌ பொண்ணை தூங்க‌ விட‌மாட்டான், சாப்பிட‌ விட‌ மாட்டான். அது ஏன், பாத்ரூம் கூட‌ போக‌ விட‌மாட்டான். அந்த‌ அள‌வுக்கு. ஒரு படத்துல‌ க‌வுண்ட‌ம‌ணி சொல்ற‌ மாதிரி, "ரெண்டு பேரும் இப்பிடியாம்"ன்னு ரெண்டு கை விர‌லையும் ஒண்ணா சேர்த்து, பிணைந்து சொல்வார்ல. அந்த மாதிரி திரிவாய்ங்க‌. இவிங்க‌ தான் அந்த‌ செட்டின் மெகா காமெடி பீஸ்.

இத‌ற்கு விதிவில‌க்கு ஒன்று உண்டு. க‌ட‌லையும் இருக்காது. செல்ஃபோன் பேட்ட‌ரி வாய்விட்டு அழும் அள‌வுக்கு புகையும் கெடையாது. ஆனால் ஆல் ஆஃப் தி ச‌ட‌ன், ஒரு நாள் நாங்க‌ ரெண்டு பேரும் ல‌வ் ப‌ண்றோம்ன்னு காலேஜேயே இன்ச் இன்ச்சா அள‌ப்பாங்க‌. கேட்டால், அவ‌ங்க‌ க‌ண்ணாலேயே பேசி ல‌வ் ப‌ண்ணாங்க‌ளாம்(மௌனம் பேசியதே சூர்யா சொல்வது போல்). முடிய‌ல‌டா சாமி, ரீல் அந்து போச்சி என்ற‌ அள‌வுக்கு அவ‌ர்க‌ள் பில்ட‌ப் இருக்கும்.

ச‌ரி, இதெல்லாம் விடுங்க‌.. இந்த‌ கொடுமையான‌ ப‌ழ‌க்க‌த்துக்கு க‌ட‌லை என்று எப்படி பேர் வ‌ந்துச்சின்னு தெரியுமா? அதே ச‌ந்தேக‌த்தை, நான் அசோக் ந‌க‌ர் முண்ட‌க்க‌ண்ணி அம்ம‌ன் கோவில் ப‌க்க‌த்தில் இருக்கும் ஜோசிய‌ரிட‌ம் கேட்டேன். அவ‌ர் சொன்ன‌து என்ன‌வென்றால், "த‌ம்பி, நீ ஒரு க‌ட‌லையை உடைச்சின்னா, உள்ளே ரெண்டு ப‌ருப்பு இருக்கும். அந்த‌ ரெண்டு ப‌ருப்பும் எப்ப‌டி இருக்கும்? ரெண்டும் எதிரெதிரா, ரெண்டுக்கும் ஒரு சின்ன‌ இட‌த்துல‌ கான்டாக்ட் மாதிரி இருந்தாலும், உண்மையிலேயே கொஞ்ச‌ம் இடைவெளி இருக்கும். அதை உடைச்சி பார்த்தா ம‌ட்டும் தான் தெரியும். அது மாதிரி, பைய‌னும் பொண்ணும் ரொம்ப‌ நேர‌ம் சிரிச்சி, சீரியஸா பேசிக்கிட்டு இருந்தா பார்க்குற‌வ‌ங்க‌ளுக்கு அவ‌ங்க‌ ல‌வ் ப‌ண்றா மாதிரி தெரியும். ரெண்டு பேரையும் கொஞ்ச‌ம் த‌னியா நோண்டுனா தான், உண்மையான‌ மேட்ட‌ர் தெரியும். க‌ட‌லையை குலுக்குனாலும் ச‌த்த‌ம் வ‌ரும். இவ‌ங்க‌ ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்துட்டாலும், ரெண்டு பேர்கிட்ட இருந்து ஓவ‌ர் ச‌வுண்ட் வ‌ரும். அதே மாதிரி, க‌ட‌லை ப‌ருப்ப வ‌றுத்தாலும் ஒரு மாதிரி தீயிற‌ ஸ்மெல் வ‌ரும். ரெண்டு பேரும் ஓவ‌ரா குலையிற‌த‌ பார்த்தாலும், பார்க்குற‌வ‌ன் ஸ்டொம‌க் ப‌ர்ன் ஆகி புகை, ஸ்மெல் வ‌ரும்" என்று நீண்ட‌ விள‌க்க‌ம் கொடுத்தார். ஏதோ புரிந்த‌வ‌னாக, நாட்டுக்கு ச‌ம்ப‌ந்த‌மான‌ விஷ‌ய‌த்தை,அதி முக்கியமாக‌ ப்ளாக் ந‌ல்லுல‌க‌ ம‌க்க‌ளுக்கு சொல்லுகிறேன்.

ச‌ரிடா, இவ்வ‌ள‌வு வியாக்ஞான‌மா பேசுறீயே, இதுல‌ நீ எந்த‌ கேட்ட‌கிரி? அப்படின்னு கேட்க‌லாம். அந்த‌ லாலிபாப் தின்ற‌து போக‌ குச்சியோடு ஒருவ‌ன் இருப்பான்னு சொன்னேன்ல‌, அந்த‌ கேட்ட‌கிரி தான் நான். :(


http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_07.html


Share/Save/Bookmark

Sunday, October 4, 2009

குப்பை லாரி

குப்பை லாரி

காத்துக்கிடப்பது மட்டுமல்ல...
காலடியில் கிடப்பதும் கூட
காதலில் மட்டும் தான் சுகம் !


***

உள்ளாடையைத்
தேர்ந்தெடுக்கக்கூட
இவ்வளவு நேரமா?
நீயெல்லாம்
பெண் பார்க்கப்போனால்
எத்தனை பெண்தான் பார்ப்பாயோ..
என்பார்கள் நண்பர்கள்!

அவர்களுக்கென்ன தெரியும்
பார்த்த முதல் வினாடியே
உன்னைத்
தேர்வு செய்துவிட்டேன்
என்பது!


***

தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!

http://tamiluzhavan.blogspot.com/2009/09/blog-post_29.html


[little-girl.jpg]
Share/Save/Bookmark

Friday, September 25, 2009

முன்னாள் காதலிக்கு...!

http://www.nikolsky.name/10/flowers_10_8_sm.jpghttp://niram.files.wordpress.com/2008/05/affection_edit.jpg  holding_hands.jpg holding_hands image by pandabearzebra

முன்னாள் காதலிக்கு...!
 
அன்பு XXXXX ,

கடந்த ஆறு மாத காலமாக என்னை(யும்) லவ்வுனதுக்கு மிக்க நன்றி. நீ இந்த கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் இந் நேர‌த்தில், உனக்கு புதிய இ.வா.காதலன் கிடைத்திருப்பான் என நம்புகிறேன். அப்படி இன்னும் கிடைக்கவில்லையெனில் கிடைப்பதற்காக அந்த எல்லாம் வல்ல கடலையாண்டவரை வேண்டுகின்றேன். சரி, விஷயத்துக்கு வர்றேன்.

நிற்க, ( கடிதமெழுதுன இதெல்லாம் போடனும்)உன்னை மறப்பதற்காக, அந்த வலியை குறைப்பதற்காக மட்டும் நான் அடுத்த தெருவில் ஒருத்தியை இப்போது லவ்வுகிறேன். ஆமாம், இது உனக்கு தெரிஞ்சு (மட்டும்) இது என்னோட நாலாவது காதல்தான். முந்தைய காதல்களில் நிறைய கற்றுக் கொண்டதால், இப்போ என்னால ரொம்ப ஈஸியாவே லவ்வ முடியுது.

காதல் வந்தாதான் கவிதை எழுத வரும்ன்னு உனக்கு தெரியும். ஆனா, இப்போ எனக்கு கவிதை எழுதறதுக்கு போரடிக்கிது. நாலு (ள்)ஆகிப் போச்சுல.அதனாலதான் உனக்கு கடிதம் எழுதுறேன். அதே மாதிரி, இப்பல்லாம் கவிதை எழுதுறது அவ்ளோ ஈஸி இல்ல. எல்லாரும் களத்தில இறங்கிட்டாய்ங்கே. அவனவன் பிரிச்சு மேய்ஞ்சுட்ருக்காங்கே. சரி, அவனுக கவிதையெல்லாம் காப்பியடிச்சு என் ஃபிகர்கிட்ட கொடுத்துராலாம்னு பார்த்தா, இப்போல்லாம் Blogஅ எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம்ல. அப்பறம் அவ என்னைய "கப் ஐஸ்" அடிச்சுருவா..! அதனால, நாம லவ்வும்போது நான் உன்னை வச்சு எழுதுன கவிதையெல்லாத்தையும் (?) எனக்கு திருப்பி அனுப்பி விட்டா நல்லாருக்கும். நான் வேற அத ஜெராக்ஸ் எடுத்து வைக்க மறந்துட்டேன். அப்டியே நான் அவளோட பேரை மட்டும் மாத்தி எழுதி குடுத்துருவேன். தயவு செஞ்சு குடுத்துட்டா,உனக்கு புண்ணியமாப் போகும் தங்கச்சி.

அப்பறம் இன்னோரு மேட்டரு, உன்கிட்ட என்னோட ஒரு அழகான (?) ஃபோட்டோ ஒன்னு இருக்குல்ல, அதையும் லெட்டர்ஸோட சேர்த்து அனுப்பி வச்சா, நல்லாருக்கும். துரதிருஷ்டவசமா,அது நான் மொத மொதல்ல லவ்வ ஆரம்பிக்கிம்போது எடுத்ததுனால ,அந்த ஃபோட்டோவுல மட்டும்தான் நான் அழகா இருப்பேன்.

அடுத்து என்னன்னா, நம்ம லவ்வுன இந்த ஆறு மாசத்துல நான் உனக்கு ஏகப்பட்ட காசு செலவழிச்சுருக்கேன். அது எவ்வளவு எனன் விவர்ம்ன்றத இங்க சொல்லிருக்கேன். அந்த காசையெல்லாம் கூடிய சீக்கிரம் திருப்பி கொடுத்திட்டன்னா, நான் என்னோட புது லவ்வருக்கு செலவழிக்க உதவும். கொஞ்சம் கீழ படிச்சு பாரேன்...

* மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிட்ட வகையில் ரூ 895/-

* கூல் ட்ரிங்க்ஸ் குடித்த‌ வகையில் ரூ2938/-

* ஸ்நாகஸ் (வகையறக்கள்) தின்ற வகையில் ரூ5645/-

* ஜூஸ் குடித்த‌ வகையில் ரூ3845/-

* சினிமாவுக்கு கூட்டிட்டு போன வகையில் ரூ1235/-

* நெட் சாட்டிங் வகையில் ரூ1499/-

* மொபைல் ரீசார்ஜ் செய்து குடுத்த வகையில் ரூ2546/-

* பெட்ரோல் செலவு வகையில் ரூ4255/-

* கிஃப்ட் வாங்கித் தந்த வகையில் ரூ7850/-

மொத்தம் 30,708 ரூபாய் ( முப்பதாயிரத்து எழு நூற்றியெட்டு ரூபாய் மட்டுமே..!)
செக் ஏற்றுக் கொள்ளப்பட மாட்ட்து. ரொக்கமாக கொடுக்கவும்.

மேல சொன்ன அமௌன்ட, கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணீரு.அப்பறம் நான் உனக்கு குடுத்த கிஃப்ட்ஸ் எதாவது நீ வச்சுருந்தன்னா, அத நான் பாதி விலைக்கு வாங்கிக்கிறதுக்கும் தயாரா இருக்கேன்.

நான் ஒன்னும் அந்தளவுக்கு, இரக்கமில்லாதவன் இல்ல. அதனால் நீ எனக்கு எழுதுன லவ்லெட்டர்ஸ் எல்லாத்தையும் (சுமார் 3 கிலோ எடையுள்ள‌) இதோட சேர்த்து அனுப்பி வச்சுருக்கேன்.பெற்றுக் கொள்ளவும். மேலும் நீ எனக்காக எதுவும் செலவு செய்திருந்தால், திருப்பி வாங்கிக் கொள்ளவும். ஆனால், நீதான் என் கூட வரும்போது மாட்டும் பர்ஸ மறந்து வச்சுட்டு வந்துருவியே. அப்பறம் எப்பிடி செலவாகியிருக்கும்..? மட்டும் விளக்கம் கொடுக்கவும்.

எது எப்பிடியோ,YYYYYY உடனான உனது தற்போதைய ஆறாவது காதலென கேள்விப்பட்டேன். அந்த காதல்(லாவது) சுபத்தில் முடியட்டுமென, எல்லாம் வல்ல அந்த கடலையாண்டவரை வேண்டுகின்றேன். நன்றி. மேல சொன்ன அமௌன்ட,கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணவும்.

இப்படிக்கு,
உன் ஐந்தாவது காதலன்.....

http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/4559884/fight-main_Full.jpg

http://www.alaikal.com/news/wp-content/vold21.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg867J4FeMcb1te9B2sTYq2vVMNzQkuwSzhFTx8CMwQ5Wvz4JuYhvyIctsma66V83OBGPHxT85kH_OLs-1riK2SnycIwotfJ6y4dCV74lTvUWRl_4k2g7I7GXT3nb-dGeZtWgk-0h-uhg/s320/untitled.JPG 
http://i277.photobucket.com/albums/kk50/weng_060/flowers.jpg

http://www.studiolo.org/WPS/PR/images/WPSPR-AT-Flowers%20Over%20San%20Francisco.wsx.jpg

http://www.eveandersson.com/photos/usa/ut/yellow-flower-near-capitol-reef-2-large.jpg





Share/Save/Bookmark

Saturday, September 12, 2009

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்



பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்

http://pirabuwin.files.wordpress.com/2008/09/eyes.jpg http://www.webmusica.co.cc/categorias/images/dance.jpg

1.பெண்களிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் நிச்சயம் விஜய்,அஜித்,சூர்யா,மாதவன் என்று கல்யாணம் ஆன நபர்களின் பேரே வரும்.ஒரு குரூப்புக்கே (நான்கு முதல் ஐந்து வரை) ஒரே ஒரு ஹீரோவின் பேர் தான் இருக்கும்.இதுவே ஆண்களிடம் கேட்டால் லேட்டஸ்ட் நாயகியின் பேரை மந்திரமாக உச்சரிப்பார்கள் (அவர்களுக்கு கல்யாணம் ஆகும் வரை தான் அதுக்கு அப்புறம் அது போன மாசம் கதைதான்)

2.பெண்கள் பெரும்பாலும் ஒத்த ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.( ஒரே சென்ட் உபயோகிப்பார்கள்,ஒரே மாதிரி சாப்பாடு ஆர்டர் செய்வார்கள்)ஆண்கள் மாறுப்பட்ட ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.(அப்பதான் விவாதம் என்று வந்தால் மாத்தி மாத்தி கிழிக்க முடியும்.)

3.பெண்களுக்கு அனுபவசாலிகளை ரொம்ப பிடிக்கும்( அது தெரிந்து தான் எனக்கு ஏற்கனவே லவ் பெயிலியர் இந்த பிட்ட பசங்க ஆயுதமா போடுறாங்க)ஆண்களுக்கு அனுபவசாலிகளை கண்டாலே பிடிக்காது காரணம் அட்வைஸ்.( அனுபவத்தில் தெரிந்து கொள்ள ஆசை படுவார்கள் நெருப்பு சுடும் என்பதை கையை விட்டு தான் தெரிந்து கொள்வார்கள்.)

4.பெண்களுக்கும் சண்டை வரும் பொழுது ரகசியங்கள் வெளியே வந்தே ஊரே சிரிக்கும். ஆண்கள் சண்டை போடும் பொழுது சேர்ந்து செய்த மிக பெரிய தவறை சாமர்த்தியமாக மறைத்து விட்டு சண்டை போடுவார்கள்

5.பெண்கள் பெரும்பாலும் மிக சரியாக யோசித்து தவறாக முடிவு எடுப்பார்கள்.செயல்படுத்தும் பொழுது சரியாக நடக்கும் (girl's thing என்று பந்தா செய்வார்கள்)ஆண்கள் யோசிக்கவே மாட்டார்கள் எண்பது சதவீதம் சரியாக இருக்கும் ஆனால் நடக்காது. இருபது சதவீதம் தவறாக இருக்கும் உடனே நடந்து விடும்.

6.பெண்கள் அவர்களது கருத்துக்கு உடன் படும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்
(எப்பவும்மே இப்படிதானா).ஆண்களுக்கு எதிர் கருத்து சொல்லும் பெண்களை ரொம்ப பிடிக்கும்.(காதலிக்கும் பொழுது மட்டும் )

7.ஒரு விசயத்தில் பெண்கள் என்னுடைய பாட்டி காலத்தில் இருந்தே மாறவில்லை.(1970 ஆம் ஆண்டு இருந்த பெண் சுதந்திரத்திற்கும் இப்பொழுது இருக்கும் பெண் சுதந்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு இன்னும் வரும் ஆண்டுகளில் இதுவும் மாறும் அப்பொழுதும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றே சொல்வார்கள்) ஆண்கள் எப்பொழுதுமே பெண்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.புரிந்து கொள்ளவே முடியாது.மாறி கொண்டே இருக்கிறார்கள்
இந்த விசயத்தில்.ஆண்களை வளர்ப்பதே பெண்கள் தான்.

8.பெண்கள் ஆண்கள் கண்டுப்பிடிப்பதை எடுத்து கொள்வார்கள்.
(ஹைஹீல்ஸ் ஆண்களுக்காக கண்டுப்பிடித்தது)ஆண்கள் வேறு எதாவது செய்ய போய் விடுவார்கள்.
 
http://www.melamorsicata.it/mela/wp-content/uploads/2008/03/ipod-girl.jpg      http://library.thinkquest.org/C001515/herodb/superboy.gif


Share/Save/Bookmark

Sunday, August 30, 2009

♥ நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள். ♥

நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள்.

OLYMPUS DIGITAL CAMERA

பதின்இரண்டு:
நள்ளிரவு வரை அவளிடம் / அவனிடம் கதைத்துவிட்டு சென்றாலும், படுக்கையில் அவளையே / அவனையே நினைத்துக்கொண்டிருப்பது.

பதின்ஒன்று:
அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.

பத்து:
அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.

ஒன்பது:
அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.

எட்டு:
அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.

ஆறு:
அவன் / அவள் உங்களுக்கான அனைத்துமாய் நினைப்பது.

ஐந்து:
அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.

நான்கு:
அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.

மூன்று:
இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது.

இரண்டு:
அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது.

ஒன்று:
அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.

love-wallpaper24

http://jaihindpuram.blogspot.com/2009/08/12.html
Share/Save/Bookmark

Saturday, August 15, 2009

♥ காதல் :- பெண்கள் ஏமாற்றுகாரர்களா?? ♥

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes



JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes




JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes



[Rathey+206.jpg]


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvdtDPhF0KimgEsynkpOwH8s5vFENkp2no-KiNwdScu9B2ywU2jkSBsMbnagGROAboQvrQAy2cnJes_nrueTqrERCGtzHW20ml_JnyJMMA2IfVwPDGG72KeGbNv9pnS-CVLK1O0qEKK8k/s320/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg




http://img201.imageshack.us/img201/3368/50152606eq7.png


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp0YvaSyJsKIqHU3H5nbEVdc8iTfvmjGzQ_ronEK7JCYyrvJ8RAEXrGUv-mTOkBkSi_aqcrbf-IYXs8biP7-3KtD5XJ-Qr87tzIXTMSASljkdrtvDfDp8-_Rv5yWZIhYxOjEv_sBo53Bk/s320/Broken_Heart.jpg
http://www.emuseumstore.com/images/uploads/2109_2286_popup.jpg

காதலில் தோல்வி அடைந்து 2007 ல் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்களின் என்ணிக்கை
மட்டும் 5827,பெண்கள் தற்கொலை பற்றி சரியான தகவல் இல்லை அல்லது குறைவானதாகவே
தற்கொலைகளாக இருக்கலாம் அல்லது தற்கொலையே இல்லாமல் இருக்காலாம்.

இந்த கட்டுரையின் நோக்கம் இளைஞர்கள் மத்தியில் காதலை பற்றி விழிப்புணர்வை
ஏற்படுத்தி காதல் தோல்வினால் ஏற்படும் தற்கொலைகளையும் வாழ்க்கை சீர்ரைவுகளையும்
தடுத்து நிறுத்துவதே ஆகும்.

நம் அரங்கத்திலும் கூட பல இளம் காளைகள் காதல் தோல்வியாள் வருத்தத்தில்
வாழ்ந்துகொண்டு இருக்கலாம்!.

காதல் என்றால் என்ன ?? ஏன் வருகிறது?

காதல் என்பது NEUROTRANSMITTERS மூலையில் சுறக்கும் வேதிபொருட்களாலும்
ஆண்ரோஜன்(ANDROGEN) ஆன் இணப்பெருக்க HORMONE மற்றும் OESTROGEN பெண்
இணப்பெருக்க காரமான HORMONE, ஆகியவற்றின் கூட்டு முயற்ச்சியால் நடக்கும்
வேதிவினையே காதல் ஆகும்.

பீனைல் எத்திலமைன் (PHENYLETHYLAMINE) என்னும் வேதி பெருளே காதலின் வேதிபெருள்
MOLECULE OF LOVE என அழைக்கப்படுகிறது இது சாக்லைட்டில் அதிகமாக காணப்படுகிறது
எனவே தான் காதர்களுக்குகிடையே பரிசு பெருட்களாக சாக்லைட் பரிபொருட்களாக
பரிமாறிகொள்ளப்படுகிறது இது காதலை தூண்டும் சக்திபடைத்தது,

மேலும் ADRENALINE என்னும் வேதிபொருள் காதல்ர்கள் ஒருவரை ஒருவர் காணும் போது
வியர்த்து போர்தல்,இரத்த அழுத்த்தை அதிகப்படுத்துதல்,நாக்கு உலர்ந்து
போதல்,நாக்கு உளருதல்,இதய துடிப்பு அதிகபடுத்துதல்,ஆகியவற்றை விளைவிக்கின்றது.

DOPAMINE என்னும் வேதிபெருள் காதலில் விழுந்தவர்களுக்கு அளவுக்கு அதிகமாக மன
மகிழ்ச்சியை தருகிறது ,இதனுடைய செயலும் COCAINE என்னும் போதை மருந்தும் ஒரே
விதமான விளைவை ஏற்படுத்துகிறது இதுதான் காதல் போதை.

சுருக்கமாக மூலையில் சுரக்கும் வேதிபொருளான DOPAMINE, EPIMEPHRANE, SEROTONIN,
NARVEGRAWATH FACTOR,ஆகியவை இனகவர்ச்சி,தூக்கமின்னை,பசியின்னை,மனமகிழ் ச்சி
ஆகியவற்றை உண்டாக்குகின்றது.

OXYTOCIN,VASOPRASSI EN என்னும் வேதிபெருட்கள் காதர்களுக்கு இடையேயான
பாசப்பினைப்பை ஏற்படுத்துகிறது,

OXYTOCIN மேலும் தாய்-சேய் பாசப்பிணைப்பை உண்டாக்குகிறது ,இது குழந்தை
பிறக்கும் போதும் குழந்தைக்கு பாலுட்டும்போது அதிகமாக சுரக்கின்றது,இதுவே தாய்
பாசத்திற்க்கு காரணமாகும்.

காதலில் தோல்வியுற்றவர்கள் ஏன் தாடிவைக்கிறார்கள் (அ)தற்கொலைகள்
செய்துகொள்கிறார்கள்??

காதலின் போது சுரக்கும் அதிகபடியான வேதிபொருட்கள் அதிகபடியான மனகிளச்சியையும்
தூண்டுகிறது காதலில் தோல்வியடையும் போது வேதி பொருட்களின் அளவும் குறைகிறது
இதுவே மனச்சோர்வு,மன அழுத்தம்,வாழ்க்கையில்
விரத்தி,தாடிவைத்தல்,தண்ணியடித்தல்,பல நேரங்களில் தற்கொலைகளில் முடிகின்றது.

பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்??

NATURAL SELECTION ''இயற்க்கை தேர்வு எனப்படும் வாழ்க்கை துணைவியை
தேர்தெடுக்கப்படும் முறை பல ஆயிரம் ஆண்டுகளாக மன இனத்திலும் விலங்கு இனத்திலும்
நடந்துவருகிறது,இதன் நோக்கம் ஆரோக்கியமான சிறந்த வாழ்க்கையை தேர்தெடுப்பது
ஆகும் .

எடுத்துகாட்டாக : எந்த ஆன் சிங்கத்திற்க்கு பிடர் முடி அதிக நீளமாக இருக்கிறதோ
அந்த ஆண் சிங்கத்தையே பெண் சிங்கங்கள் தேர்வு செய்து குட்டிகளை பெற்றுகொள்ளும்
அதேபோது ஆன் மயிலின் தோகையை பார்த்து பெண் மயிலும் ஆண் மயிலை தேர்ந்தெடுக்கும்
எனவேதான் ஆண் மயில் தோகைவிரித்து நடனமாடி பெண் மயில்களை கவர்ந்து இழுக்க
முயற்ச்சி செய்கின்றது, இப்படி தேர்வு செய்தவதன் மூலமே ஆரோக்கியமான
குட்டிகளையோ,அல்லது மயில் குஞ்சுகளையோ தோற்றுவிக்கமுடியும்.

பண்டைய காலங்களில் பெண்கள் ஆண்களை தேர்ந்தெடுத்தனர் உதாரணமாக
சுயம்வரம்,மஞ்சுவிரட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு மணம்
முடித்தனர்,வட்டகல்லு தூக்குதல் .......

இதையும் ஆதிகாலங்களில் வலிமையான ஆண்களையே பெண்கள் தேர்ந்தெடுத்தனர் இதற்க்கு
காரணம் வலிமையான ஆண்களால் மட்டுமே விளங்குகளை வேட்டையாடமுடியும் ,மேலும்
அவர்களையும் அவர்களின் குழந்தைகலையும் கொடிய விளங்குகலிடம் இருந்தும்
காப்பாற்றமுடியும் .

நாகரிக வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முறையும்
காரணங்களும் மாறியுள்ளது

இன்று பெண்கள் ஆண்களின் படிப்பு,மற்றும் வேலையை பார்த்தோ அல்லது அழகை
பார்த்தோ,வசதி வாய்ப்பை பார்த்தோ அல்லது அன்பு பாசத்திற்க்காகவோ ஆண்களின்
துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் ,எந்த ஆணை தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களின்
கடந்த கால வாழ்க்கை சூயலை பொருத்து அமையும்.

பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்களையோ அல்லது ஆண்களைவிட மிக தூரத்தில்
இருப்பவர்கள் மீது இனகவர்ச்சி அதிகமாக இருக்கும் எடுத்துகாட்டாக வேறு
இனம்,வேறுமதம்,வேறு மாநிலம், இதற்க்கு காரணம் MHC(MAGOR HISTOCOMPATABILITY
COMPLEX) என்னும் ஜீன்களே ஆகும் இது 6வது குரோமோசோமில் உள்ளது,இதுவே வாழ்க்கை
துணையை தேர்ந்தெடுத்தல் நோய் எதிர்ப்பு சக்தி,புத்து கூர்மை,ஆகியவற்றை
நிர்ணக்கின்றது,

தூரத்தில் திருமணம் செய்யும் போது பல்வேறு விதமான நோய் எதிர்ப்பு பொருட்கள்
(ANTIBODIES)குழந்தையில் உற்பத்திசெய்கின்றது இதனால் குழந்தைகள் அதிக
ஆரோக்கியாமாகவும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்களாகவும் புத்தி
கூர்மையுள்ளவர்களாகவும் இருப்பார்கள்

இதுவே நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்தால் ஆரோக்கியம் அற்ற,புத்தி
கூர்மை குறைந்த குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

எளிமையாக சொல்வதினால் (SURVIAL OF FITTEST) வலிமையுள்ளதே வாழும், சிறந்த
மற்றும் வலிமையான ஆண்களேயே பெண்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

வலிமை அல்லது சிறந்தது எண்பது பணமாகவோ,படிப்பாகவோ,அழகாகவோ இருக்கலாம் இப்படி
இவர்கள் சுயநலத்துடன் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றேடுத்து
சிறந்த கல்வியையும் சிறப்பான வாழக்கையும் அமைத்துகொடுக்கமுடியும் .

எடுத்துகாட்டாக ஏற்கனவே காதலித்துகொண்டு இருக்கும் பெண்கள் வசதியான
மாப்பிள்ளையோ,அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளையோ கிடைத்தால் காதலித்தவர்களை
விட்டுவிட்டு அவர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள் ஆனால் நமது சமுதாயமும்
சினிமாக்களும் ,இளைஞர்களும் பெண்களை ஏமாற்றுகாரர்களாகவும்,சுயநலகாரர்களாகவும்,
சித்தரிக்கிறார்கள் பெண்கள் அப்படி இருந்தால் மட்டுமே மனிதகுலம் தலைத்து
வாழமுடியும்.

இந்த சுயநலகுணம் என்று சொல்லப்படும் பண்பு பெண்களின் 6 குரோமோசோமில் உள்ள MHC
ஜீன்களில் எழுதபட்டுள்ளது இதுவே இயற்க்கை அதை ஒன்றும் மாற்றமுடியாது

அவர்களை திட்டுவது கேவலமாக சித்தரிப்பது ஆகியவை உங்களின் நேரத்தை வீணடிக்குமே
தவிர பெரிய மாற்றத்தை நிகழ்த்தி விடாது .

எனவே காதலில் தோல்வியுற்ற ஆண்களே ,அரங்க நண்பர்களே பெண்களை
தூற்றுவதைவிட்டுவிட்டு சிறந்தவர்களாகவும் வலிமையானவர்களாகவும் மாறி காதலில்
வெற்றி பெறுங்கள்.


http://th03.deviantart.net/fs4/300W/i/2005/141/0/3/InterNET_LOVe_by_tipsyfairy.jpg

128.jpg இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை image by ntcforum
Share/Save/Bookmark

Sunday, August 9, 2009

நானும் என் காதலியும் கடற்கரையில்

நானும் என் காதலியும் கடற்கரையில்

http://nitharsanam.net/wp-content/uploads/2007/09/indlove-merina3.jpg

நான் :  கடலைப் பார் கண்ணே.. எவ்வளவு அழகாக இருக்கிறது.. ?? காதலி : கடலைதான் தினமும் காட்டுகிறாயே.. இன்னிக்காவது, ரெண்டு ரூபாய்க்கு கடலையை வாங்கி என் கண்ணில் காட்ட கூடாதா என் கண்ணாளா..!

நானும் என் காதலியும் கடலை தின்றுகொண்டே ஒருவரை மற்றவர் காதலுடன் உற்றுநோக்கி உலகை மறந்து இருந்தபோது.
..
காதலி : என்ன அப்படி பார்க்கறே டியர்..  இப்போ உன் மனசு முழுக்க நாந்தானே..? நான் : அட.. ஆமாம்..! எப்படிக் கண்டுபிடிச்சே..? காதலி : உன் லவ் எனக்கு தெரியாதா..? சரி.. இந்த நிமிடத்தில நீ என்ன நினைக்கிறே..? மறைக்காம சொல்லேன்..

நான்:
இந்த தீனி திங்கிறாளே.. முக்காவாசி கடலையை இவளே தின்னுட்டாளே.. இவள வச்சு குடும்பம் நடத்த முடியுமான்னு யோசிக்கிறேன்.. ! காதலி : ????????????
 
 

fpn03.jpg image by thameem1984

Share/Save/Bookmark

Sunday, August 2, 2009

இதயம் இருக்கும் இடங்கள்...!

Heart Reef, Great Barrier Reef of the Whitsundays




Heart-Shaped Forest, Cantabria, Spain






Heart-Shaped Island, Gutierrez Lake, Patagonia



Heart-Shaped Lake, Ohio

Heart-Shaped Lake, Chembra, India

Heart-Shaped Mangrove, Voh, New Caledonia



Heart-Shaped Wetland, Guandu Nature Park, Taiwan




http://www.amazingonly.com/gigantic-hearts-by-mother-earth/


Share/Save/Bookmark

Friday, July 31, 2009

♥ மீசை முளைத்த காதல் ♥

முதல் முதலா ஒரு லவ் லெட்டர் எழுதி பள்ளி தோழி கிட்ட கொடுத்தேன்.
http://www.alumni.upenn.edu/pennfund/img/love.jpg


Dear,

I am suffering from love from the day when I saw you.

I am unable to attend all classes.

So please grant me your love for the whole life.

thank you

me...









[11961557.jpg]



ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு
இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல்
நிலைத்திருக்கும்.

2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை
என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள்
என்று அர்த்தம்.

3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை
உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து
வாங்குவாள்.

4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina
படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது
எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு
மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன்
"சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப
முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...

6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில்
தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம்.
(கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா
சாமி)


7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு,
கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க
புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....

8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால்
ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய்
பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி"
என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும்
"சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி
கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள்
படும் சிரமம் அது.

9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என்
ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்"
எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று
எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம்
கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப்
செய்து விடுவீர்களா?

10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம்
காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி
முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை
சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம்
ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.

12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா
இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத
மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க
உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா
இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா
இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச
ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம்.
சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு...
அப்புறம்தான் பதில் வரும்.
Share/Save/Bookmark

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

என் பக்கங்கள்..!

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)
Real Time Web Analytics

unique styles

beyouths@Yahoo.com http://services.nexodyne.com/email/icon/sAYrKrhEvtE%3D/q%2BXe5KA%3D/R01haWw%3D/0/image.png foryouths@beyouths.com loveable@poetic.com beyouths@Hotmail.com

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு